மதிப்பு
"திரு. மாதவன் ராவ், இரண்டு கோடியே நாற்பது லட்சம். மேலும் ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!”"
மூன்று முறை மணி ஒலிப்பியபின் அந்த ஓவியத்தின் ஏலம் முடிவுக்கு வந்தது.மாதவன் ராவின் செக்ரட்டரி நிருபமா, தன் பையில் இருந்த காசோலையை பூர்த்தி செய்யத்தொடங்கினாள்.
"உங்க பாஸ் ரொம்ப லக்கி மேடம். ஓவியர் செழியனோட பெயிண்டிங் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.”"
"உண்மையாகத்தான். இந்த பெயிண்ட்டிங், எங்க பாஸ் பல நாள் ஆசைபட்ட ஒன்னு. அதனால் தான் அவர் தினமும் இங்கு வந்து அந்த பெயிண்டிங்கை பல மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். உலகில் இருக்கும் அத்தனை இம்ப்ரெஸனிஸ்டோட பெயிண்டிங்கையும் சேகரிக்கறதுதான் எங்க பாஸோட மிகப் பெரிய லட்சியம். அதுக்கு அவர் எத்தனை கோடியையும் செலவு செய்வார்."
"மேடம். ஒரு சின்ன வேண்டுகோள்.”"
"சொல்லுங்க"
"ஓவியர் செழியனுக்கு எங்க சபா சார்பில் ஒரு விழா எடுக்கிறதா முடிவு செய்திருக்கோம். அது வைரக்கும் இந்த பெயிண்டிங் இங்கு இருந்தால் நல்லா இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணி...."
"என்னால எதுவும் இப்போ சொல்ல முடியாது சார். இதில் எங்க பாஸ்தான் முடிவு சொல்லனும். நான் எதற்கும் உங்களுக்காக பேசி பார்கிறேன்.”"
"நல்லது மேடம்."
காசோலையை சபா செக்ரட்டரியிடம் கொடுத்துவிட்டு, பெயிண்டிங்கிற்கான உரிம்மப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு விடைபெற்றாள் நிருபமா.
மறுநாள்.
"ஹலோ! எம்.எஃப்.எஸ் சபா?"
"ஆமாம். நீங்க?"
மறுமுனையில் தொடர்ந்தாள் நிருபமா. "நான் மிஸ்டர்.மாதவன் ராவோட செக்ரெட்டரி பேசறேன்.”"
"சொல்லுங்க மேடம். உங்க போன் காலைத்தான் எதிர்பார்த்து இருந்தோம். சார் என்ன சொன்னாருங்க?"
"சார் சம்மதிச்சுட்டார். ஆனால், எந்த டேட் வரை பெயிண்டிங் உங்களுக்குத் தேவைபடும்னு தெரியனும்!"
"வருகிற 27ஆம் தேதி மாலை விழா வச்சிருக்கோம். மறுநாள் காலையே நீங்க எடுத்துகலாம்.”"
"சரி. ஆனால் பெயிண்டிங்க்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கனும். எங்க பாஸ் அந்த பெயிண்டிங்கை அவர் உயிரைவிட மேலாக பார்கிறார். அதனால், பெயிண்டிங்க்கு ஒரு சிறு பாதிப்பு வந்தால் கூட, உங்க சபா பெரிய விலைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்”"
"பெயிண்டிங் எங்கள் பொறுப்பு மேடம். ஓவியத்தோட மதிப்பு தெரிஞ்சவங்க நாங்க. அதனால் முழு பாதுகாப்போட இருக்கும்.”"
"நல்லது."”
"மேலும் ஒரு சின்ன வேண்டுகோள் மேடம். விழாவிற்கு மாதவன் சாரும் வந்தா நல்லா இருக்கும். ஓவியத்தோட உரிமையாளர் என்பதைத் தாண்டி, இம்ப்ரெஸனிசத்தை உண்மையா ரசிக்கிற ரசிகர். அதனால் அவர் வந்தால், இந்த விழா இன்னும் சிறப்பா இருக்கும்னு சபா சார்பா கேட்டுகறோம்."”
“"ஒரு நிமிடம். நான் பாஸிடம் கேட்டுட்டு சொல்றேன்”"
சிறிது நேரம் கழித்து..” "மன்னிக்கவும், பாஸ் 27ஆம் தேதி ஒரு முக்கியமானதொழில்சங்க சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டி உள்ளது. அதனால் அவர் வரமுடியாது. இருந்தாலும், பாஸ் சார்பில், ஒரு பாராட்டு கடிதம் உங்களை வந்து சேரும் என தெரிவிக்கச்சென்னார்.”"
27ஆம் தேதி மாலை விழா நிறைவு கட்டத்தை எட்டியிருந்தது.
ஓவியத்தின் முன் சிறிய மேடை அமைத்து, கலைத்துறை அமைச்சர், சபா நிர்வாகிகள் மத்தியில் செழியன் அமர்ந்திருந்தார். செழியனின் கனிவான முகத்தில், மெளிதாக கோபம் தலைகாட்டியிருந்ததை யாரும் கவனிக்க தவறவில்லை.
"உலகில் பிசாரோ போல், மோனே போல், சிஸ்லி போல் இம்ப்ரெஸனிசத்தில் நம் நாட்டிலும் ஒரு உலகத்தர கலைஞன் இருப்பது நம் எல்லோருக்கும் பெருமை.. நன்றி திரு.செழியன் அவர்களே. கடந்த ஐம்பது நாட்கள் தங்களது ஓவியத்தை எங்கள் சபாவில் கொண்டதற்காகவும், தங்களது வருகையினாலும் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம். மீண்டும் உங்களுக்கு....”"
முடிவுரையை முழுவதும் கேட்காமலும் கூட செழியன் மேடையைவிட்டு வெளியேறினார். அவர் முகத்தில் இருந்த கோபம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. ஆனால் காரணம் தான் ஒருவருக்கும் புரியவில்லை.
விரைவாக அவரை பின் தொடர்ந்து அவர் காரினுள் ஏறும் போது காரணத்தை பணிவுடன் வினவினார் சபா செக்ரெட்டரி.
செழியன் இறுதியாக வாய்திறந்து, "யோவ். ஐம்பது நாளா என்னத்தையா கிழிச்சீங்க? ஒருத்தனுக்கு கூடவா என் பெயிண்டிங் தலைகீழா மாட்டியிருந்தது தெரியலை?”."
செக்ரெட்டரியின் மன்னிப்பிற்கு காத்திராமல் செழியனின் கார், தெரு எல்லையை சென்று மறைந்தது.
---முற்றும்---

No comments:
Post a Comment